முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல நலம் பெற தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள்...

தினத்தந்தி  தினத்தந்தி
முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல நலம் பெற தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள்...

சென்னை,

முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல நலம் பெற தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல் அமைச்சருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு “கார்டியாக் அரெஸ்ட்” என்று கூறப்படும் இதயம் செயல் இழப்பு ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அவரது இதயத்தை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கான சிகிச்சையை தீவிரப்படுத்தினார்கள்.

முதலமைச்சருக்கு சுவாசம், இதய செயல்பாடு உதவிக்காக எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  

டாக்டர்கள் தொடர்ந்து  சிகிச்சை அளித்து வருகின்றனர்.  உயிர்காக்கும் கருவிகள் மூலம்  அவருக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

மூலக்கதை