ஜெயலலிதாவை சிங்கப்பூர் அழைத்து செல்ல முடியுமா? மருத்துவர்கள் பரிசோதனை
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க சிங்கப்பூரில் இருந்து மருத்துவர்கள் இன்று அப்பல்லோ வந்துள்ளனர். சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்து செல்லும் நிலையில் ஜெயலலிதா உடல்நிலை உள்ளதா? என்று பரிசோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ஆம் தேதி உடல்நலம் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று வரை அவருக்கு மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று சிங்கப்பூரிலி இருந்து மருத்துவர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அதன்படி அவர்கள் ஜெயலலிதாவை பரிசோதனை செய்து அப்பல்லோவிலே சிகிச்சை அளிக்க முடியுமா அல்லது சிங்கப்பூர் அழைத்து செல்ல வேண்டுமா என்பதை முடிவு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.