திருமுல்லைவாயலில் பச்சையப்பன் கல்லூரி மாணவரை கத்தியால்...

தினத்தந்தி  தினத்தந்தி
திருமுல்லைவாயலில் பச்சையப்பன் கல்லூரி மாணவரை கத்தியால்...

ஆவடி,

பச்சையப்பன் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய மாநில கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாணவருக்கு கத்திக்குத்து

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலையில் வசிப்பவர் சுரேஷ்குமார். இவரது மகன் சுரேந்திரன் (வயது 20) சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.எஸ்சி. இறுதியாண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் உறவினரின் இறுதி சடங்கு தொடர்பாக சுவரொட்டிகளை ஒட்டுவதற்காக நண்பர்களுடன் சென்றார்.

திருமுல்லைவாயல் பஸ் நிறுத்தம் அருகே சுரேந்திரன் மட்டும் தனியாக சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்தார். அப்போது மாநகர பஸ்சில் அங்கு வந்து இறங்கிய மாநில கல்லூரி மாணவர்கள் 4 பேர் திடீரென சுரேந்திரனின் தலையில் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

2 பேர் கைது

படுகாயமடைந்த சுரேந்திரன் அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான 4 பேரை தேடிவந்தனர். கல்லூரிக்கு போகும்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன்விரோதத்தால் இந்த தாக்குதல் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சுரேந்திரனை கத்தியால் குத்திய மாநில கல்லூரி மாணவர்களான ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த காமேஷ் (19) மற்றும் அப்துல் ரகுமான் (19) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். இருவரையும் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மூலக்கதை