ஜியோ அழைப்புகளுக்கு இணைப்பு வழங்காத நிறுவனங்களுக்கு 3,000 கோடி அபராதம்
புதுடெல்லி: ரிலையன்ஸ் ஜியோ சிம்மிலிருந்து அழைக்கப்படும் கால்களுக்கு சரிவர இணைப்பு வழங்காத தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு டிராய் மொத்தம் 3,000 கோடி அபராதம் விதிக்க பரிந்துரை செய்துள்ளது. நம் நாட்டில் செல்போன் அறிமுகமான காலத்தில் சாமானிய மக்களுக்கு அது எட்டா கனியாகவே இருந்தது. அதனை தகர்த்து எறியும் வகையில் 500க்கு செல்போனை அறிமுகம் செய்தது ரிலையன்ஸ் நிறுவனம். இது தொலைத்தொடர்பு துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்படிப்பட்ட நிறுவனம் 4ஜி சேவையில் களம் இறங்க போவதாக அறிவித்தது. இதனால் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் ...