சாதி சான்றிதழ் கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு பெற்றோர்களுடன் வந்த மாணவ, மாணவிகள்
சாதி சான்றிதழ் கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு பெற்றோர்களுடன் மாணவ, மாணவிகள் வந்தனர். இதுதொடர்பாக அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
சாதி சான்றிதழ்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா கொண்டையம்பள்ளி, மூலப்புதூர், தகரபுதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் 40-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை பெற்றோர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
மாணவ, மாணவிகள் அனைவரும் ‘இந்து அம்பலக்காரர் என்ற பெயரில் சாதி சான்றிதழ் வேண்டும்‘ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை வைத்திருந்தனர். பின்னர் மாணவர்கள் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்கினர். அந்த மனுவில், ‘எங்கள் சமூக மக்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை இந்து அம்பலக்காரர் என்று சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது.
வழங்க மறுப்பு
ஆனால் தற்போது புதியதாக விண்ணப்பித்தவர்களுக்கு அதிகாரிகள் இந்து அம்பலக்காரர் என சாதி சான்றிதழ் தர மறுக்கிறார்கள். இதனால் அரசின் சலுகைகளை பெறுவதிலும், உயர்க்கல்விக்கு செல்வதிலும் எங்களது குழந்தைகளுக்கு பெரிதும் இடையூறாக இருக்கிறது. எனவே மாணவ, மாணவிகளின் நலன் கருதி இந்து அம்பலக்காரர் என்று சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்காடு உள்ள கொண்டையானூர் பகுதியை சேர்ந்த முதியவர்கள் பலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். இதில், ‘எங்கள் கிராமத்தில் 30 பேருக்கு உதவித்தொகை வழங்குவது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த 4 மாதங்களாக உதவித்தொகை கிடைக்காமல் நாங்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே நிறுத்தப்பட்ட உதவித்தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
