ஜெயலலிதாவுக்கு முன்னதாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ஸ்டாலின்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
ஆனாலும், மு.க.ஸ்டாலின் ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட சி.ஜி. காலணி, ஜெ.ஜெ. காலணி, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் வீடு வீடாக சென்று துண்டுபிரசுரங்களை விநியோகித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்துள்ளார்.
சென்னையில் நாளை முதல் ஜெயலலிதா பிரசாரத்தைத் தொடங்க உள்ள நிலையில் ஸ்டாலின் அவருக்கு முன்னதாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.