1200 குடிசைகள் எரிந்து சாம்பல்

தினகரன்  தினகரன்
1200 குடிசைகள் எரிந்து சாம்பல்

தாகா: வங்கதேசத்தின் மிர்பூரில் சாலண்டிகா குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தினால் தீ மளமளவென பரவியது. இதில் அங்கிருந்த 1,200 குடிசைகள் எரிந்து நாசமாகின. 3,000க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர் மூன்று மணி நேர கடுமையான போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ  விபத்தின்போது, போர்க்களத்தில் குண்டு போட்டது போன்று, அப்பகுதியில் பெரும் புகை மூட்டம் காணப்பட்டது. விபத்துக்கான காரணம் பற்றி உயர்நிலை விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை