'ஆளுங்கட்சி செயல்பட தி.மு.க., துணை நிற்கிறது!'

தினமலர்  தினமலர்

சென்னை : ''ஆளுங்கட்சி, ஓரளவுக்கு செயல்பட, தி.மு.க., தான் துணை நிற்கிறது,'' என, அக்கட்சி தலைவர், ஸ்டாலின் கூறினார்.

அவரது பேட்டி: அமெரிக்காவுக்கும், லண்டனுக்கும் செல்ல வேண்டிய ஏற்பாட்டில், முதல்வர், இ.பி.எஸ்., இருப்பதால், அவர், மழையால் பாதிக்கப்பட்ட, நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல நேரம் இருக்காது என, கருதுகிறேன்.நிவாரணப் பணிகளுக்கு, தி.மு.க., 10 கோடி ரூபாய் நிதி கொடுத்துள்ளது. தனிப்பட்ட முறையில், நான் கொடுக்கவில்லை. எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மேம்பாட்டு நிதியில் இருந்து கொடுக்கப்படுகிறது.அரசின் சார்பில், அவர்கள் நிதி ஒதுக்கப் போகின்றனர். அதை, முதல்வர், தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுக்க போகிறாரா;

மக்களின் வரிப்பணம் அது. விளம்பரத்திற்காக, நான் ஆய்வு நடத்தியதாக, ஆளுங்கட்சியினர் விமர்சனம் செய்வதை பற்றி கவலைப்படவில்லை. ஆளுங்கட்சி, ஓரளவுக்கு செயல்பட, தி.மு.க., தான் துணை நிற்கிறது. இவ்வாறு, ஸ்டாலின் கூறினார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, கேரள மக் களுக்கு, நேற்று, 82 லட்சம் ரூபாய் மதிப்பிலான, நிவாரணப் பொருட்கள் அடங்கிய, 10க்கும் மேற்பட்ட லாரிகளை, கொடியசைத்து, ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

மூலக்கதை