நீலகிரி மாவட்டத்திற்கு உடனடி நிவாரணத்திற்காக ரூ.30 கோடி ஒதுக்கீடு: முதல்வர் பழனிசாமி உத்தரவு
சென்னை: நீலகிரி மாவட்டத்திற்கு உடனடி நிவாரணத்திற்காக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சேதமடைந்த உட்கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்க நிதி தொடர்பான முன்மொழிவுகளை அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.