பாபநாசம் அணை ஒரே நாளில் 4 அடி உயர்வு

தினகரன்  தினகரன்
பாபநாசம் அணை ஒரே நாளில் 4 அடி உயர்வு

வி.கே.புரம்: மழை காரணமாக பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் 51.80 அடியாக இருந்த நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 55.85 அடியானது. அணைக்கு வினாடிக்கு 196.85 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையிலிருந்து 304.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.இதுபோல் 75.86 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 3 அடி அதிகரித்து 78.94 அடியானது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 50.60 அடியாக உள்ளது.

மூலக்கதை