ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: உச்சநீதிமன்றத்தை அணுக தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

தினகரன்  தினகரன்
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: உச்சநீதிமன்றத்தை அணுக தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை பற்றி மத்திய அரசு ஆய்வு அறிக்கைக்கு தடை விதிக்க தமிழக அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசடைய ஸ்டெர்லைட் ஆலை காரணமல்ல என்று மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து ஸ்டெர்லைட்டால் தான் நிலத்தடி நீர் மாசடைத்ததாக தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான மத்திய அரசின் அறிக்கைக்கு தடை விதிக்க மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

மூலக்கதை