திருவொற்றியூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் கருணாநிதிக்கு புகழஞ்சலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவொற்றியூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் கருணாநிதிக்கு புகழஞ்சலி

திருவொற்றியூர்: திருவொற்றியூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருவொற்றியூர் வடக்கு மாடவீதி தெருவில்   நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, கிழக்கு பகுதி செயலாளர் தி. மு. தனியரசு முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், பேச்சாளர்கள் திருச்சி சிவா, சு. ப. வீரபாண்டியன், அருள்மொழி, அப்துல் காதர் உட்பட 76 கவிஞர்கள் கலந்து கொண்டு கருணாநிதியின் புகழை விளக்கி  பேசினர். இதைத்தொடர்ந்து கருணாநிதியின் மக்கள் நல பணி குறித்த நூல் வெளியிடப்பட்டது.

இதில், நிர்வாகிகள் எம். என். கணேஷ் குறிஞ்சி கணேசன், துக்காராம்,  திரிசங்கு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


.

மூலக்கதை