கஜா புயல் முன்னெச்சரிக்கை குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி
சென்னை: கஜா புயலை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சென்னை எழிலகத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், நெல்லூர் அருகே 130 மீனவர்கள் கடலில் உள்ளனர் என்றும் தெரிவித்தார். நகரும் செல்போன் கோபுரங்கள் குறிப்பிட்ட 7 மாவட்டங்களில் தயாராக வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.