அரசுப்பள்ளிகளில் பயோ-மெடரிக் வருகைப் பதிவேடு- அரசாணை வெளியீடு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
அரசுப்பள்ளிகளில் பயோமெடரிக் வருகைப் பதிவேடு அரசாணை வெளியீடு!

அரசுப் பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவேடு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

 அரசுப் பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன், கடந்த மே மாதம் 30-ம் தேதி நடந்த பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது  அறிவித்து இருந்தார். 

அதன்படி தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. 3,688 உயர்நிலைப்பள்ளிகள், 4,040 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 7,728 பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை பொருத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ.15 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிகளுக்கு கால தாமதமாக வருவதை தடுக்க முடியும் என பள்ளிக்கல்வித்துறை நம்பிக்கை தெரிவித்து உள்ளது. ஏற்கனவே பயோமெட்ரிக் வருகைப் பதிவுத் திட்டமானது பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளிகளிலும், போரூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சோதனை அடிப்படையில் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை