லாரிகளில் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கான கட்டணம் உயர்வு
சென்னை : லாரிகளில் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கான கட்டணம் 22% உயர்கிறது. சரக்கு கட்டணம் உயர்த்தப்படும் என்று லாரி புக்கிங் ஏஜெண்ட் சம்மேளனம் தகவல் அளித்துள்ளார். ஜூலை முதல் டீசல் விலை படிப்படியாக உயர்ந்து லிட்டருக்கு ரூ. 15 அதிகரித்துள்ளது. டீசல் விலை உயர்வை சமாளிக்க முடியாததால் சரக்கு கட்டணம் உயர்த்தப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.