ஸ்ரீரங்கத்தில் அறநிலையத்துறை ஊழியர்களுடன் பா.ஜ நிர்வாகி மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஸ்ரீரங்கத்தில் அறநிலையத்துறை ஊழியர்களுடன் பா.ஜ நிர்வாகி மோதல்

திருச்சி: அறநிலையத்துறை அதிகாரிகளை இழிவாக பேசிய பாஜ தேசிய செயலர் எச். ராஜாவை கண்டித்து, திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் ரங்கா ரங்கா கோபுரம் அருகில் ஊழியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அங்கு வந்த பாஜவின் முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாவட்ட தலைவர் நடராஜன், வம்பிழுக்கும் தொனியில் பேசினார்.

அப்போது ஒரு பணியாளர் நடராஜனை அடிக்கப் பாய்ந்தார். நடராஜன் பதில் தாக்குதலுக்கு தயாரானார்.

இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீசார் இருவரையும் தடுத்தனர்.

அப்போது பணியாளர்கள் அனைவரும் பாஜ நிர்வாகியை அடிக்க பாய்ந்தனர். இதனால் நடராஜனை பாதுகாப்பாக மீட்டு போலீஸ் பூத்துக்குள் அமரச் செய்தனர்.



அதன்பின் அங்கிருந்து ஜீப்பில் ஏற்றி அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். கலவரத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்ட நடராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் பணியாளர் சங்கம் சார்பில் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதேபோல், கும்பகோணம், மயிலாடுதுறையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

.

மூலக்கதை