திருவள்ளூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவள்ளூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை: விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோடை காலத்திற்கு பின்னரும் திருவள்ளூர் மாவட்டத்தில் வெயில் வாட்டி வரும் நிலையில், வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய மழை தொடர்ந்து பெய்தது.

பள்ளிப்பட்டு, செம்பரம்பாக்கம், தாமரைப்பாக்கம், சோழவரம், பூண்டி, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்தது. மற்ற பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டில் 50 மி. மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக செங்குன்றத்தில் 5 மி. மீட்டர் மழையும் பெய்துள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்: (மி. மீட்டரில்) பள்ளிப்பட்டு- 50, தாமரைப்பாக்கம்- 47, செம்பரம்பாக்கம்- 43, பூண்டி- 32, சோழவரம்- 27, ஆர். கே. பேட்டை- 27, திருவள்ளூர்- 27, ஊத்துக்கோட்டை- 21, பூந்தமல்லி- 21, அம்பத்தூர்- 20, திருவாலங்காடு - 19, திருத்தணி- 12, பொன்னேரி- 12, கும்மிடிப்பூண்டி- 10, செங்குன்றம்- 5, மொத்தம்- 373 மி. மீட்டர்.

.

மூலக்கதை