மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு
மதுரை: மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நசிமாபானு, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி ஆகியோர் ஆய்வு நடத்தி வருகின்றனர். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் பராமரிப்பு பணிகள், உணவு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நீதிபதிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.