கேரளா மழை வெள்ள பாதிப்பு அதி தீவிர இயற்கை பேரிடர்: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: கேரளா மழை வெள்ள பாதிப்பை அதி தீவிர இயற்கை பேரிடர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கேரள மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 361 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 40 பேரை காணவில்லை என்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 87 ஆக உள்ளது.