உத்திரமேரூரில் இந்திய குடியரசு கட்சி பிரமுகர் இல்ல மஞ்சள் நீராட்டு விழா: செ.கு.தமிழரசன் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
உத்திரமேரூரில் இந்திய குடியரசு கட்சி பிரமுகர் இல்ல மஞ்சள் நீராட்டு விழா: செ.கு.தமிழரசன் பங்கேற்பு

உத்திரமேரூர்: இந்திய குடியரசு கட்சியின் காஞ்சி மேற்கு மாவட்ட தலைவர் காஞ்சி என். சம்பத் - அஞ்சலை தம்பதியரின் மகள் ச. லோகேஸ்வரியின் மஞ்சள் நீராட்டு விழா, உத்திரமேரூர் அடுத்த காரணைமண்டபம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவுக்கு இந்திய குடியரசு கட்சி தலைவர் செ. கு. தமிழரசன் தலைமை வகித்து, ச. லோகேஸ்வரியை வாழ்த்தி, வாழ்த்துரை வழங்கினார்.

காஞ்சி மேற்கு மாவட்ட தலைவர் காஞ்சி என். சம்பத் வரவேற்றார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் மங்காபிள்ளை, மாநில இளைஞரணி செயலாளர் சி. எஸ். கொளரிசங்கர், மாநில தொழிற்சங்க பொருளாளர் எஸ். மலைராஜன், காஞ்சி கிழக்கு மாவட்ட தலைவர் இதயவேந்தன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் வந்தை எம். மோகன், மாவட்ட செயலாளர் சோதியம்பாக்கம் எஸ். கே. பழனி, மாவட்ட துணைத் தலைவர் கே. எம். கோபால், மாவட்ட துணைச் செயலாளர் சித்திரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.



நிகழ்ச்சிக்கு காஞ்சி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், சமூக சேவகர் ஏ. வி. டி. தேவராஜ், ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ்பாபு, தங்கபஞ்சாட்சரம், தருமன் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ச. லோகேஸ்வரியை வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர்.

.

மூலக்கதை