வீடு புகுந்து நண்பர் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் படுகொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
வீடு புகுந்து நண்பர் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் படுகொலை

மண்ணச்சநல்லூர்: வீடுபுகுந்து நண்பரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். திருச்சி அடுத்த சமயபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் ஆனந்த்(35).

இவரது மனைவி தேன்மொழி. அதே பகுதியை சேர்ந்தவர்  விஜய்.

இவர் ஆனந்தின் நண்பர். இதனால் ஆனந்த் அடிக்கடி விஜய் வீட்டுக்கு வந்து செல்வாராம்.

இதன்காரணமாக விஜய்யின் மனைவி மீது ஆனந்துக்கு ஆசை ஏற்பட்டதால் எப்படியாவது அவரை அடைய வேண்டும் நினைத்துள்ளார். ஆனால் ஆனந்தின் எண்ணத்தை அறிந்து கொண்ட விஜய் மனைவி  அவரிடம் சரியாக பேசுவதில்லை.

நேற்று மாலை வேலை முடிந்து வந்த விஜய்யும், ஆனந்தும் மது அருந்தி உள்ளனர். பின்னர் விஜய் வீட்டிற்கு வராமல் வெளியே போய்விட்டார்.

இதை அறிந்த  ஆனந்த், நேற்று இரவு 11 மணிக்கு விஜய் வீட்டுக்குள்  புகுந்துள்ளார்.

அப்போது ஆனந்த் வருவதை தெரிந்து கொண்ட விஜய் மனைவி, கணவன் இல்லை என்று கூறியும் வீட்டுக்குள் புகுந்த ஆனந்த், அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார்.

அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டனர். அதற்குள் ஆனந்த் தப்பி ஓடிவிட்டார்.

நள்ளிரவு 12 மணி அளவில் விஜய் வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி, ஆனந்த் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதை தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விஜய் ஆனந்த்தை தேடி அலைந்தார். இன்று அதிகாலை 4 மணி அளவில் ஆனந்த் சமயபுரம் நால்ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன் படுத்திருந்ததை பார்த்த விஜய் அருகில் கிடந்த பாறாங்கல்லை எடுத்து ஆனந்த் தலையில் போட்டதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஆனந்த் பரிதாபமாக இறந்தார்.

விஜய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சமயபுரம் போலீசார் அங்கு சென்று ஆனந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு  அனுப்பி வைத்தனர்.

தப்பியோடிய விஜயை தேடி வருகின்றனர்.

.

மூலக்கதை