பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சென்னை அயனாவரம் பகுதியில் “பஸ் டே” கொண்டாட்டம்: பயணிகள் புகார்
சென்னை: சென்னையில் கல்லூரிகள் இன்று திறந்த நிலையில் மாணவர்கள் “பஸ் டே” கொண்டாடியதாக புகார் எழுந்துள்ளது. சென்னை அயனாவரம் பகுதியில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் “பஸ் டே” கொண்டாடினர். இதனால் பயணிகள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். பஸ் டே கொண்டாடிய மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.