அம்பத்தூர் ஐசிஎப் காலனியில் மின்வெட்டால் மக்கள் தவிப்பு : போராட்டம் நடத்த முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அம்பத்தூர் ஐசிஎப் காலனியில் மின்வெட்டால் மக்கள் தவிப்பு : போராட்டம் நடத்த முடிவு

அம்பத்தூர் : அம்பத்தூர் ஐசிஎப் காலனியில் தொடர் மின்வெட்டால் தவிக்கும் மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர், ஐசிஎப் காலனியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இந்த பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக இரவு நேரங்களில் தொடர் மின்தடையும் பகல் நேரங்களில் குறைந்த மின்னழுத்த பிரச்னையும் நிலவி வருகிறது. குறிப்பாக இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணிவரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மின்தடை செய்யப்படுகிறது.

இதனால் மக்கள் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.

குறைந்த மின்னழுத்த பிரச்னையால் வீடுகளில் உள்ள டிவி, பிரிஜ் உள்ளிட்ட அனைத்து மின்சாதன பொருட்களும் பழுதடைந்து சேதமாகிவிடுகிறது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை மக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.

இதே நிலைமை நீடித்தால், மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல், மின்வாரிய அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஐசிஎப் காலனி மக்கள் தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை