ரயில் பயணிகளிடம் கொள்ளை மீட்கப்பட்ட நகைகள் ஒப்படைப்பு
ஈரோடு: ஈரோடு, சேலம், கோவை வழியாக செல்லும் ரயில்களில் ஈரோடு ஹோம் சிக்னல் மற்றும் மாவேலி பாளையம் அருகே பெண்களிடம் மர்மநபர்கள் நகைகளை பறித்து சென்றனர். இதுதொடர்பாக, ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளையில் ஈடுபட்ட மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மொகல் தாலுகா பகுதியை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். இவர்கள் அளித்த தகவலின் படி மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் சென்று 27 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். இவற்றை ரயில்வே போலீஸ் டிஐஜி பாலகிருஷ்ணன் நேற்று உரியவர்களிடம் வழங்கினார்.