டாக்டரிடம் ரூ2 லட்சம் பறக்கும் படை பறிமுதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டாக்டரிடம் ரூ2 லட்சம் பறக்கும் படை பறிமுதல்

வேலூர்: வேலூர் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுரேஷ் தலைமையிலான குழுவினர் நள்ளிரவு 12 மணி முதல் வேலூர் கொணவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இரவு 12. 30 மணியளவில் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, காரை ஓட்டி வந்தவர் கொணவட்டத்தை சேர்ந்த யுனானி டாக்டர் ஹமீனுதின் என்பதும், கணக்கில் வராத ₹2 லட்சத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து உரிய ஆவணம் இல்லாததால்  பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் பிரிவு துணை தாசில்தார் வேண்டாவிடம் ஒப்படைத்தனர்.

.

மூலக்கதை