அறந்தாங்கியில் உள்ள வெள்ளாற்றில் மணல் அள்ள இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள வெள்ளாற்றில் மணல் அள்ள இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆதிமூலம் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக ஆற்றில் மணல் அள்ளுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாக எத்தனை வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன? எனவும் கேள்வி எழுப்பினர்.