நாகையில் கடனை கட்டக்கோரி வங்கி அதிகாரிகள் மனைவியை மிரட்டியதால் கணவர் தற்கொலை
நாகை : சூரமங்கலம் பகுதியில் கடனை கட்டக்கோரி வங்கி அதிகாரிகள் மனைவியை மிரட்டியதால் கணவர் தற்கொலை செய்து கொண்டார். சுய உதவிக்குழு மூலம் பெற்ற ரூ.30,000 கடனை கஜா புயல் பாதிப்பால் ராதிகா திரும்ப செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடனை திருப்பி செலுத்துமாறு ராதிகாவை வங்கி அதிகாரிகள் மிரட்டியதால் கணவர் வீரமணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.