திருச்சியில் இன்று விசிக மாநாடு: 100 வாகனங்களில் தொண்டர்கள் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருச்சியில் இன்று விசிக மாநாடு: 100 வாகனங்களில் தொண்டர்கள் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் தேசம் காப்போம் மாநாடு குறித்து விளக்கி கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்க திருவள்ளூர் மாவட்ட விசிக செயலாளர் அறிவுறுத்தினார். இதையடுத்து, கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி செயலாளர் ந. ஜெமினி தலைமையில் நேற்று கும்மிடிப்பூண்டி பஜார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாநாடு குறித்து விளக்கி பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
இதில் தொழிலாளர் விடுதலை முன்னணி செயலாளர் சுகுமார், மாவட்ட ஒன்றிய பொருளாளர் சுதேசன், மாவட்ட நிர்வாகி தலித் அய்யா, வடக்கு ஒன்றிய செயலாளர் விமல், நகர துணை செயலாளர் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் தலைமை நிர்வாக குழு செயலாளர் அ. பாலசிங்கம், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ஏ. நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி, மாநாடு குறித்து விளக்கி கூறினர். அவர்களுடன் 50-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சியில் இன்று விசிக சார்பில் நடைபெறும் தேசம் காப்போம் மாநாட்டுக்கு, கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கட்சி தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர் என தொகுதி செயலாளர் ஜெமினி கூறியுள்ளார்.

.

மூலக்கதை