கொடநாடு கொள்ளை விவகாரம்: 24ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு திமுக போராட்டம்

தினகரன்  தினகரன்
கொடநாடு கொள்ளை விவகாரம்: 24ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு திமுக போராட்டம்

கொடநாடு கொள்ளை விவகாரத்தில் வரும் 24ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கக் கோரி போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடநாடு கொள்ளை விவகாரத்தில் முதல்வர் மீது ஆளுநர் அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், சேகர் பாபு, சுதர்சனம், மா.சுப்ரமணியம் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெறவுள்ளது.

மூலக்கதை