டொரண்டோ துப்பாக்கிச் சூட்டில் இளம்பெண் பலி: 13 பேர் படுகாயம்

தினகரன்  தினகரன்
டொரண்டோ துப்பாக்கிச் சூட்டில் இளம்பெண் பலி: 13 பேர் படுகாயம்

கனடா: டொரண்டோவின் டன்போர்த் மற்றும் லோகன் அவென்யூ பகுதியில் நேற்றிரவு மர்மநபர் ஒருவர் 14 பேரை கொடூரமாக துப்பாக்கியால் சூட்டு, அதன் பிறகு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளம்பெண், சிறுவர் உட்பட 14 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் மோசமான நிலையில் படுகாயமடைந்த இளம்பெண் தற்போது உயிரிழந்துள்ளார் என்றும், மற்ற 13 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்னவென்று சரியாக தெரியவில்லை என்றும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் டொரண்டோ போலீசார் கூறியுள்ளனர்.

மூலக்கதை