இந்திய உணவு கழகத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி மோசடி செய்த பெண் கைது
கடலூர்: இந்திய உணவு கழகத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.4 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக தேடப்பட்ட சோபியா கைது செய்யப்பட்டார். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பல நபர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பறித்ததாக சோபியா மீது குற்றம் சட்டம்பட்டது. இந்திய உணவு கழக அதிகாரி போல் தம்மை காட்டி கொண்டு ரூ.4 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்டதாக சோபியா மீது புகார் தெரிவிக்கப்பட்டது.