தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் பெற்றுத்தர வழக்கு தொடுத்த டி.கே.ரங்கராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள் ...

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் பெற்றுத்தர வழக்கு தொடுத்த டி.கே.ரங்கராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள் ...

 

நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய பிழையில் இருந்தன. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் மாணவர்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.  இதை கையில் எடுத்த மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் அவர்கள் மாணவர்கள் நலன் கருதி ஹைகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்.  அதன்படி, நீட் தேர்வை தமிழ் வழி கேள்வியில் நிறைய தவறுகள் இருக்கிறது. 49 வினா-விடைகள் தவறாக இருந்தது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 196 மதிப்பெண் குறைவாக கிடைக்கும் என்றார். இந்த 196 மதிப்பெண்களை வழங்கவும், நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்றும் கோரிக்கை வைத்து வழக்கு தொடுத்தார்.  அதன்படி, தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்வழங்க வேண்டும். 49 வினா-விடைகள் தவறாக இருந்ததால் கேள்விக்கு 4 மதிப்பெண் என்று மொத்தமாக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும். அதோடு புதிய மதிப்பெண் அடிப்படையில் சிபிஎஸ்இ புதிய தரவரிசை பட்டியல் உருவாக்க வேண்டும். அதன்பின் கலந்தாய்வு தேதிகளை அறிவிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பால் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிஎஸ்இ தரப்பை ஹைகோர்ட் கிளை கண்டித்து இருந்தது. அதேபோல் சிபிஎஸ்இ பெரிய அளவில்சர்வாதிகாரத்தனத்துடன் செயல்பட விரும்புகிறதா என்றும் கேள்வி எழுப்பி இருந்தது.  தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் பெற்றுத்தர வழக்கு தொடர்ந்த   டி.கே.ரங்கராஜன் அவர்களுக்கு மாணவர் நலனை கருத்தில் கொண்டு சரியான தீர்வு கண்டதற்கு வலைத்தமிழ் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது...

நீட் தேர்வு வினாத்தாள் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டதில் நிறைய பிழையில் இருந்தன. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் மாணவர்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.  இதை கையில் எடுத்த மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் அவர்கள் மாணவர்கள் நலன் கருதி ஹைகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். 


அதன்படி, நீட் தேர்வை தமிழ் வழி கேள்வியில் நிறைய தவறுகள் இருக்கிறது. 49 வினா-விடைகள் தவறாக இருந்தது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 196 மதிப்பெண் குறைவாக கிடைக்கும் என்றார். இந்த 196 மதிப்பெண்களை வழங்கவும், நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்றும் கோரிக்கை வைத்து வழக்கு தொடுத்தார். 


அதன்படி, தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண்வழங்க வேண்டும். 49 வினா-விடைகள் தவறாக இருந்ததால் கேள்விக்கு 4 மதிப்பெண் என்று மொத்தமாக தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும். அதோடு புதிய மதிப்பெண் அடிப்படையில் சிபிஎஸ்இ புதிய தரவரிசை பட்டியல் உருவாக்க வேண்டும். அதன்பின் கலந்தாய்வு தேதிகளை அறிவிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பால் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சிபிஎஸ்இ தரப்பை ஹைகோர்ட் கிளை கண்டித்து இருந்தது. அதேபோல் சிபிஎஸ்இ பெரிய அளவில்சர்வாதிகாரத்தனத்துடன் செயல்பட விரும்புகிறதா என்றும் கேள்வி எழுப்பி இருந்தது. 


தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் பெற்றுத்தர வழக்கு தொடர்ந்த  டி.கே.ரங்கராஜன் அவர்களுக்கு மாணவர் நலனை கருத்தில் கொண்டு சரியான தீர்வு கண்டதற்கு வலைத்தமிழ் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது...

 

மூலக்கதை