புழல் சிறைக்குள் இயக்குனர் கவுதமன் உட்பட 41 பேர் உண்ணாவிரதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
புழல் சிறைக்குள் இயக்குனர் கவுதமன் உட்பட 41 பேர் உண்ணாவிரதம்

புழல்: தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானதை கண்டித்தும் அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் சென்னையில் போராட்டம் நடத்திய திரைப்பட இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 30 பேரையும் கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் அனைவரையும் புழல் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, புழல் சிறைக்குள் இதே கோரிக்கையை வலியுறுத்தி 39 பேர் உட்பட சிறையில் இருக்கும் மாவோயிஸ்ட்டுகள் தசரதன், வெற்றிவீரபாண்டியன் என 41 பேரும் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.

வழக்கம்போல் இன்று காலை ஜெயிலர் உதயகுமார் சென்று, காலை உணவை சாப்பிட வலியுறுத்தியும் மறுத்துவிட்டனர். ‘ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்வரை நாங்கள் சாப்பிட மாட்டோம்’ என உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

.

மூலக்கதை