90,000 ரயில்வே பணியிடங்களுக்கு 2.3 கோடி விண்ணப்பம் குவிந்தன

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: ரயில்வேயில் 90,000 பணியிடங்களுக்கு 2.3 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்வேயில் கடந்த பிப்ரவரி 3 மற்றும் 10ம் தேதிகளில் 89,409 பணியிடங்களை நிரப்ப அளவிப்பு வெளியிடப்பட்டது. இதில் லோகோ பைலட் மற்றும் டெக்னீஷியன் வேலைக்கு 2,502 பணியிடங்களுக்கு 47.56 லட்சம் விண்ணப்பங்கள், லெவல் 1 பிரிவில் 62,907 பணியிடங்களுக்கு 1.9 கோடி விண்ணப்பங்கள் என மொத்தம் 2.37 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. ரயில்வே பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால் 10 லட்சம் மரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. விண்ணப்பத்தை தபாலில் அனுப்பும்போது சென்று சேர்வது பற்றிய கவலை விண்ணப்பதாரருக்கு ஏற்படும். ஆன்லைனில் இந்த பிரச்னைகள் கிடையாது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை