கோவை வ.உ.சி. மைதானத்தில் போலீஸ் குவிப்பு

தினகரன்  தினகரன்

கோவை: தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை பிளஸ் 1க்கு  பொது தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்தநிலையில், ‘சேவ் பிளஸ் 1 ஸ்டூண்டன்ஸ்’ என்ற பெயரில் பல்வேறு வெப்சைட்டுகள் மற்றும் பேஸ்புக்கில் அரசுக்கு எதிர்ப்பு காட்டி போராட்டம்  நடத்தப்படவுள்ளதாக தகவல் பரவியது. இதை தெரிந்து கொண்ட ேபாலீசார் முன்னெச்சரிக்கையாக வ.உ.சி. மைதானத்தில் பாதுகாப்புக்காக  குவிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, வ.உ.சி மைதானத்தில் பல ஆயிரம் பேர் திரண்டனர். தற்போது, பிளஸ் 1  மாணவர்களின் அறிவிப்பு  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை