திருவேற்காட்டில் 500 மரக்கன்றுகள் நடும் விழா

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவேற்காட்டில் 500 மரக்கன்றுகள் நடும் விழா

திருவள்ளூர்: திருவேற்காடு கற்பகாம்பாள் நகரில் 500 மரக்கன்றுகள் நடும் விழா, கேஎல்ஜி அசோசியேஷன் சார்பில் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர்கள் தி. லோ. தமிழரசன், பத்மநாபன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கிராம பெரியவர் தி. லோகநாதன். மரக்கன்றுகளை நட்டு விழாவினை துவக்கி வைத்தார்.

நகர் முழுவதும் 500 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில், தலைவர் ஜான்பூங்கா, செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பாஸ்கர்ராவ், விஜயராஜ், தீபக், பால்முனியன், நித்யராஜ், சங்கர், வினோத்குமார், ராமலிங்கம், ஏகாம்பரம், பிரான்சிஸ், யோகானந்தம் கலந்து கொண்டனர்.

கேஆர்எஸ் அசோசியேஷன் சார்பில்,காமாட்சிபுரத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் தி. லோ. தமிழரசன், காந்தி தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இதில், தலைவர் ஏ. நாகேந்திரன், செயலர் எஸ். எல். எஸ். மணி, பொருளாளர் ஏ. கார்த்திக் மற்றும் கருணாகரன், முருகன், சங்கர், அப்துல்ரகுமான், தினேஷ், நடராஜ், பாஸ்கர் கலந்துகொண்டனர்.

.

மூலக்கதை