சர்க்கரை நோயால் மகன் கால்கள் அகற்றப்பட்டதால் மனம் உடைந்த வயதான தம்பதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சர்க்கரை நோயால் மகன் கால்கள் அகற்றப்பட்டதால் மனம் உடைந்த வயதான தம்பதி பூச்சி மருந்து குடித்து தற்கொலை

ஊத்துக்கோட்டை: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மகனின் இரு கால்கள் அகற்றப்பட்டதால் மனம் உடைந்த வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். பெரியபாளையம் அருகே நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கிருஷ்ணாபுரம் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பரெட்டி (85).

இவரது மனைவி கோவிந்தம்மாள் (80). இவர்களது மகன் செல்வராஜ் (55).

இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். செல்வராஜ், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரை சாப்பிடுகிறார்.

கடந்த சில மாதங்களாக சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமானது. டாக்டரிடம் சிகிச்சைக்காக சென்றபோது, ‘கால்களை அகற்றினால்தான் உயிர் வாழ முடியும்’ என்று கூறி விட்டார்.

இதையடுத்து வேறு வழியின்றி செல்வராஜின் இரு கால்களும் அகற்றப்பட்டது. இதனால் செல்வராஜ் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுடன் வாழ்ந்து வருகின்றனர்.

செல்வராஜுக்கு கால்கள் அகற்றப்பட்ட பிறகு, அவரது வீட்டுக்கு உறவினர்கள் வருவதை தவிர்த்தனர்.

மகனின் நிலையை பார்த்து கிருஷ்ணப்ப ரெட்டியும், கோவிந்தம்மாளும் மிகவும் மனம் வருந்தி வரும் நிலையில், உறவினர்கள் வராதது அவர்களுக்கு மேலும் கவலையை ஏற்படுத்தியது. ‘மகனுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதால்தானே நம் வீட்டுக்கு உறவினர்கள் வர மறுக்கிறார்கள்.

இதையெல்லாம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதே’ என எண்ணி எண்ணி மனம் உடைந்து தற்கொலை முடிவுக்கு சென்றனர். இந்நிலையில், நேற்று மாலை வீட்டின் ஒரு அறையில் புற்களுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு கட்டிலில் இருவரும் படுத்து விட்டனர். இரவில் சாப்பிடுவதற்காக மருமகளும், பேரனும் எழுப்பினர்.

மயங்கிய நிலையிலேயே கிடந்தனர். எழும்பவில்லை.

அப்போது திடீரென இருவரது வாயிலும் நுைர வந்தது. அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டனர்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனே இருவரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

டாக்டர்கள் பரிசோதனையில், கிருஷ்ணப்ப ரெட்டியும், கோவிந்தம்மாளும் இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை