மதுரவாயல் அருகே திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
மதுரவாயல் அருகே திருமணமான 3 மாதத்தில் இளம் பெண் தற்கொலை

பூந்தமல்லி: சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் சாமிநாதன் (25) கார்பென்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், உறவு பெண்ணான சிவரஞ்சனி (22) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு  தூங்க சென்ற சிவரஞ்சனி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.   இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிவரஞ்சனியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

திருமணமாகி 3 மாதத்தில்  இளம்பெண் தற்கொலை செய்ததால் அம்பத்தூர் ஆர்டிஓ விசாரித்து வருகிறார்.

மற்றொரு சம்பவம்: போரூர் அடுத்த காரம்பாக்கத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் மணிகண்டன் (21).

10ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லையாம்.

இதனால் மன உளைச்சலுடன் இருந்துள்ளார். நேற்று வீட்டின் தனி அறைக்கு தூங்க சென்ற  மணிகண்டன் நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அறையை பார்த்தபோது, மணிகண்டன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.   இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை