‘பொறுமையாக இருக்க மாட்டேன்’: தினகரன் அணி எம்எல்ஏ ஆவேசம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘பொறுமையாக இருக்க மாட்டேன்’: தினகரன் அணி எம்எல்ஏ ஆவேசம்

அறந்தாங்கி: புதுகை மாவட்டம் அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்றுமுன்தினம் இலவச லேப்டாப் வழங்கும் விழாவில் அதிமுகவில் எதிரெதிர் அணிகளில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், தினகரன் ஆதரவு அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதியும் கலந்துகொண்டதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்காமல், மைக் செட் இன்றி விழா நடந்தது.

இந்நிலையில் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சுப்பிரமணியபுரம், நாகுடி, அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் எம்எல்ஏ ரத்தினசபாபதி, நேற்று 2-வது நாளாக இலவச லேப்டாப்களை வழங்கினார்.

அவர் பேசுகையில், ‘அறந்தாங்கி தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.

இனியும் அறந்தாங்கி தொகுதி மக்களின் தேவைகள், கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் காலதாமதம் செய்தால், நான் அதை பார்த்துக் கொண்டு பொறுமையாக இருக்க மாட்டேன்.

மாவட்ட நிர்வாகம் அறந்தாங்கி தொகுதி மக்களின் தேவைகளை கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தரவேண்டும்’ என்றார்.

.

மூலக்கதை