ஆண்டிபட்டி அருகே வேன் மோதி எஸ்ஐ உள்பட 2 பேர் பலி

தினகரன்  தினகரன்

ஆண்டிபட்டி : தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பாப்பம்மாள்புரத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி (55). தேனி நகர் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் தனுஷ்கோடி (60). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். நண்பர்களான இருவரும் நேற்று அதிகாலை தேனி - ஆண்டிபட்டி சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருநெல்வேலியில் இருந்து தேனி மாவட்டம், தேவாரம் நோக்கி சென்ற சரக்கு வேன் இவர்கள் மீது மோதியது. இதில் 2 பேரும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஆண்டிபட்டி போலீசார், வேன் டிரைவர் விஜியை (22) கைது செய்தனர்.

மூலக்கதை