குட்டையில் குளித்த 2 சிறுமிகள், சிறுவன் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
குட்டையில் குளித்த 2 சிறுமிகள், சிறுவன் பலி

திருவாரூர்: திருவாரூர் அருகே வில்வனம்படுகை கிராமத்தில் வசித்து வருபவர் முருகானந்தம் (40). நன்னிலம் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது மகள் ரிமா(7). மகன் ஹரிஹரசுதன்(6).

அப்பகுதியில் உள்ள பள்ளியில் ரிமா 2ம் வகுப்பும், ஹரிஹரசுதன் 1ம் வகுப்பும் படித்து வந்தனர். முருகானந்தத்தின் மைத்துனர் தண்டலையில் வசிக்கும் பழனிவேல்.

இவரது மகள் தரணிகா (13). 8ம் வகுப்பு படித்து வந்த தரணிகா பள்ளி விடுமுறைக்காக முருகானந்தம் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார்.

நேற்று மாலை குழந்தைகள் மூவரும் வீட்டின் அருகில் உள்ள குட்டைக்கு குளிக்க சென்றனர்.

குட்டையில் இறங்கிய அவர்கள் சேற்றில் சிக்கி நீண்ட நேரமாகியும் வெளியே வரமுடியாமல் தவித்தனர். தரணிகா சேற்றில் சிக்கி தவிப்பதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்தனர்.

உறவினர்கள் மற்றும் பொது மக்கள் தரணிகாவை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.   ரிமாயும், ஹரிஹரசுதனும் குட்டையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.

இதுபற்றி திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

.

மூலக்கதை