திமுகவுடன் கூட்டணி குறித்து பரிசீலனை முத்தரசன் பேட்டி
புதுக்கோட்டை: திமுகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி தேர்தல் நேரத்தில் பரிசீலனை செய்யப்படும் என்று முத்தரசன் கூறினார். புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக மின்வெட்டு அதிக அளவில் ஏற்படுகிறது.
இதை உடனடியாக தமிழக அரசு சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் பிரச்னைக்காக தான் திமுகவுடன் அணி சேர்ந்து கடந்த 25ம் தேதி நடந்த முழு அடைப்பு, மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கலந்து கொண்டது.
திமுகவுடன் தேர்தல் கூட்டணி குறித்து தமிழகத்தில் தேர்தல் வரும் போது கட்சி பரிசீலனை செய்யும் என்றார்.
.