கூடுவாஞ்சேரியில் பைக்கிலிருந்து விழுந்து முதியவர் பரிதாப பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கூடுவாஞ்சேரியில் பைக்கிலிருந்து விழுந்து முதியவர் பரிதாப பலி

கூடுவாஞ்சேரி: சென்னை அடுத்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு மகாலட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (85). இவர், நேற்று காலை கரண்ட் பில் கட்டுவதற்காக பைக்கில் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை வழியாக புறப்பட்டார்.

மின்வாரிய அலுவலகம் எதிரே வந்தபோது நிலைத்தடுமாறி  பைக்குடன் கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார் கருப்பையாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.   புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை