புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வேவு வார்த்த இந்திய கடற்படையின் போர் விமானத்துக்கு பிரியா விடை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வேவு வார்த்த இந்திய கடற்படையின் போர் விமானத்துக்கு பிரியா விடை!

அரக்கோணம்: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான யுத்தத்தில் இலங்கைக்காக வேவு பார்த்த இந்திய கடற்படையின் டி.யு.142 எம் என்ற போர் விமானம் சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படைக்குச் சொந்தமானது டி.யு.142 எம் என்ற போர் விமானம். அரக்கோணம் கடற்படை விமான தளத்தில் இருந்து இந்த போர் விமானம் பணியாற்றி வந்தது.

கடந்த 30 ஆண்டுகாலமாக சேவையில் ஈடுபட்டு வந்தது இந்த விமானம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இலங்கைக்காக கடற்பகுதியில் வேவு பார்த்தது இந்த போர் விமானம்தான்.

அதேபோல் மாலத்தீவு ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளின் போது இப்போர் விமானத்தை இந்தியா அனுப்பியிருந்தது. தற்போது இந்த விமானம் சேவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் கடற்படை தளத்தில் விமானப் படை வீரர்கள் அணிவகுப்புடன் விடை பெற்றது இந்த போர் விமானம்.

மூலக்கதை