திருப்பூர் அரசுமருத்துவமனையில் லஞ்சம் வாங்கிய அலுவலர் பணியிட மாற்றம்
திருப்பூர்: திருப்பூர் அரசுமருத்துவமனையில் இறப்பு சான்றிதழ் தர லஞ்சம் வாங்கிய அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் ஆவண காப்பக அலுவலராக பணிபுரிந்த ராஜசேகர் இறப்பு சான்றிதழ் தர லஞ்சம் வாங்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து லஞ்சம் வாங்கிய ராஜசேகரை அவனாசி மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்து இயக்குநர் விஜயக்குமார் உத்தரவிட்டார்.