தினகரன் அளித்துள்ள வாக்குறுதி குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது : பாண்டியராஜன் பேட்டி

தினகரன்  தினகரன்

சென்னை : ரயில்வே துறையால் அப்புறப்படுத்தப்படும் 6 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு கட்டி தரப்படும் என சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஆர்.கே.நகரில் மொத்தம் 57 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. 57 ஆயிரம் குடும்பங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சொந்தவீடு வைத்துளள்னர். தினகரன் அளித்துள்ள வாக்குறுதி குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும் அதிமுகவும் ஆட்சியம் ஓரு குடும்பத்தின் கையில் செல்லக் கூடாது என்பதே தங்கள் நிலை என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி அளித்தார்.

மூலக்கதை