பொறியியல் கல்லூரியில் படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை திருப்பி அளிக்க உத்தரவு

தினகரன்  தினகரன்

சென்னை : பொறியியல் கல்லூரியில் படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை 7 நாட்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என தொழில்நுட்பக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. கல்லூரிக்கு வந்த நாட்களை மட்டும் கணக்கிட்டு மீதி கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும். மேலும் வகுப்புகள் தொடங்கும் முன்னரே கல்லூரியை விட்டு சென்றால் ரூ.1000 மட்டும் பிடித்தம் செய்து, மீதி கட்டணத்தை திருப்பி அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் கல்லூரிகளுக்கு இருமடங்கு அபராதம் அல்லது உரிமம் ரத்து என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை