முதல்வராகும் தமது ஆசையை சசிகலா வெளிப்படுத்திய பிறகுதான் கட்சியில் பிரச்சனை : ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
சென்னை : கட்சியில் குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக தான் சசிகலா பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்டார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் முதல்வராகும் தமது ஆசையை சசிகலா வெளிப்படுத்திய பிறகுதான் பிரச்சனை ஏற்பட்டது. மேலும் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க தாம் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. மேலும் ஜெயலலிதா உடல்நலம் குறித்து மருத்துவமனை தெரிவித்த தகவல்களை நம்பினோம். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.