கூடங்குளத்தில் 2 வது அலகில் மின் உற்பத்தி துவக்கம்

தினகரன்  தினகரன்

 கூடங்குளம் : கூடங்குளம் அணுஉலையில் 2வது அலகில் மின் உற்பத்தி தொடங்கியது. 230மெகா வாட் மின்சார உற்பத்தி தொடங்கியதாக அணு உலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 15நாட்கள் பராமரிப்பு பிறகு இன்று பிற்பகல் மின் உற்பத்தி தொடங்கியது. நாளை காலை 10மணி முதல் மின் உற்பத்தி 900 மெகா வாட்டை எட்டும் என கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சாகு தெரிவித்துள்ளார்.

மூலக்கதை