சென்னை எல்லை விரிவாக்கப் பணியை சிஎம்டிஏ தொடங்கி விட்டது - உடுமலை ராதாகிருஷ்ணன்
சென்னை : சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வின் எல்லை பரப்பை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளதாக வீட்டு வசதித்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய 1,189 சதுர கி.மீ. பரப்பில், சென்னை பெருநகர் பகுதி உள்ளது. இதுவே, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் எல்லையாக உள்ளது.